மோகனூர், டிச.25: மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1991 முதல் 1993 ஆண்டு வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளி வளாகத்தில் ₹1 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட கவிஞர் ராமலிங்கம் சிலை திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து ₹3 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட வகுப்பறைகள் திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து நலிவடைந்தவர்களுக்கு தையல் மிசின் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பள்ளி பருவ நாட்கள் குறித்து நினைவு கூர்ந்தனர். இந்நிகழ்ச்சியில், வக்கீல் காமராஜ், சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சீரமைக்கப்பட்ட வகுப்பறைகள் திறப்பு
previous post