* துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்த ‘போஸ்பரஸ் குத்துச்சண்டை’ போட்டியில் பங்கேற்ற இந்திய குழுவினர்களில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று ஏற்பட்டுள்ள பயிற்சியாளர்கள் தர்மேந்திர யாதவ், சந்தோஷ் பிர்மோல், வீரர்கள் கவுரவ் சோலங்கி, பிரயாக் சவுகாக், பிரிஜேஷ் யாதவ் உள்ளிட்டோர் அங்கேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.* வெஸ்ட் இண்டீஸ்-இலங்கை இடையிலான 2வது டெஸ்ட் ஆன்டிகுவாவில் நடக்கிறது. முதல் நாள் நேர ஆட்ட முடிவில் வெ.இண்டீஸ் 86 ஓவரில் 7விக்கெட் இழப்புக்கு 287ரன் குவித்தது. . களத்தில் 99* ரன்னுடன் இருந்த பிரத்வைட் சதமும், 43*ரன்னுடன் இருந்த மற்றொரு வீரர் ரகீம் கார்ன்வால் அரைசதமும் 2வது நாளான நேற்று விளாசினர். * மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலியிறுதியில் விளையாட ஆஷ்லி பார்தி(ஆஸ்திரேலியா), நவோமி ஒசாகா(ஜப்பான்), அர்யனா சபலங்கா(பெலாரஸ்) பியான்கா(கனடா), சாரா சொரிபெஸ்(ஸ்பெயின்), மரியா சக்காரி(கிரீஸ்), அனஸ்டரிஜா(லாத்வியா), எலினா ஸ்விடோலினா(உக்ரைன்) ஆகியோர் தகுதிப் பெற்றுள்ளனர்.* மீன் தொட்டியை தூய்மை செய்யும் போது, தொட்டி உடைந்து கண்ணாடி சில்லு ஜோப்ரா ஆர்ச்சரின் கையில் பொத்துக் கொண்டதாம். அதனை அகற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதனால் ஆர்ச்சர் இப்போது கட்டாய ஓய்வில் உள்ளார்….
சில்லிபாய்ன்ட்
previous post