ஜெயங்கொண்டம், ஆக.20: சிறுமியை பலாத்காரம் செய்த கூலி தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து உடையார்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகன் அரவிந்தன்கோபு (29) (கூலித்தொழிலாளி) (திருமணமானவர்) இவர் 17 வயதுடைய சிறுமி ஒருவரை கடந்த சில தினங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை தனது வீட்டிற்கே அழைத்து சென்று பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்கள் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) விஜயலட்சுமி தலைமையிலான போலீசார் அரவிந்தன்கோபு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர். இரண்டாம் கட்ட ‘நான் முதல்வன் உயர்வுக்குபடி” திட்டம் சிறப்பு முகாமானது 23ம் தேதிதத்தனூர் மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. முதல் கட்ட சிறப்பு முகாம்களில் கலந்துகொள்ள இயலாதர்கள் அல்லது தவறவிட்டவர்கள் இந்த முகாமை பயன்படுத்தி கொள்ளலாம்.