பல்லாவரம்: பழைய பெருங்களத்தூர் பகுதியில் சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதுதொடர்பாக, மணமகன் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். பழைய பெருங்களத்தூர், தேசமுத்து நகர், மாரியம்மன் கோயிலில் நேற்று ஒரு சிறுமிக்கு சட்ட விரோதமாக திருமணம் நடக்க இருப்பதாக தாம்பரம் அனைத்து மகளிர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது, மேற்கு தாம்பரம், அற்புதம் நகர், கலங்கல் தெருவை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு திருமணம் நடக்க இருந்தது தெரிந்தது. உடனடியாக போலீசார் அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர். இதுதொடர்பாக, சமூக நல ஆர்வலர் அனுஷியா அளித்த புகாரின் பேரில், மணமகன் கிஷோர் குமார் (24), அவரது பெற்றோர் மற்றும் சிறுமியின் பெற்றோர் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்….