சிவகாசி, ஜூன் 9: சிவகாசியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிந்த 6 மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. சிவகாசி மாநகராட்சியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் மாடுகள், சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள், அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்களை அகற்றுவதற்காக ‘தீவிர பறக்கும் படை’ அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர் தினசரி மாநகராட்சி பகுதிகளில் ஆய்வு செய்து வருகின்றனர். நேற்று சிவகாசி நேஷனல் காலனி பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றி திரிந்த 6 மாடுகளை பிடித்து மாடு வளர்ப்போருக்கு ரூ.25 ஆயிரம் அபராதமாக விதித்தனர். மாநகராட்சி பகுதியில் சாலை ஆக்கிரமிப்பு ெசய்வோர், மாடுகளை ரோட்டில் திரிய விடுவோர் மீது அபராதம் வசூலிப்பது தொடரும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.