கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே கிழ்முதலம்பேடு பகுதியில் ஷேர் ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்ததில் 5 பெண்கள் படுகாயமடைந்தனர். கும்மிடிப்பூண்டி அடுத்த கிழ்முதலம்பேடு ஊராட்சி சென்னை -கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஒடிசா, பீகார், ஜார்கண்ட், டெல்லி மற்றும் கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை, செங்குன்றம், சென்னை, ஆரம்பாக்கம் பகுதிகளில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் புதுவாயில் இருந்து சென்னை நோக்கி வந்த ஷேர்ஆட்டோ 5 பெண்களை ஏற்றிக்கொண்டு கிழ்முதலம்பேடு ஊராட்சி வந்து கொண்டிருந்தது. அப்போது மேம்பாலம் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் திருப்பும் முனையில் திடீரென ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் 5 பெண்கள் காயமடைந்தனர். அவர்களை சக வாகன ஓட்டிகள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். இதுகுறித்து கவரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். …
சாலை வளைவில் ஷேர் ஆட்டோ கவிழ்ந்ததில் 5 பெண்கள் படுகாயம்
previous post