மதுரை, அக். 22: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் வரும் 30ம் தேதி முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை நடப்பது வழக்கம். இதையொட்டி வழக்கமாக அக்.27ம் தேதி தேவர் சிலைக்கு பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் மின் விளக்கு அலங்காரம் அமைக்கப்படும். இந்நிலையில் இந்த வருடம் தேவர் சிலைக்கு அலங்கார மின் விளக்குகள் அமைக்க, பாதுகாப்பு காரணங்கள் காரணமாக மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து மின் விளக்குள் அலங்காரம் செய்ய அனுமதி கோரி, பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் பொதுச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான கதிரவன் தலைமையில், நேற்று தேவர் சிலை அருகே திடீர் சாலை மறியல் நடத்தப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த தல்லாகுளம் போலீசார் விரைந்து வந்து, போராட்டம் நடத்தியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் கதிரவன் உள்ளிட்ட 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்ட 30 பேர் கைது
0