xபாப்பிரெட்டிப்பட்டி, ஆக.9: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சரக அளவில் நடைபெற்று வரும் குழு விளையாட்டு போட்டிகளில், ஸ்டான்லி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், கோ-கோ போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர். பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கலந்துகொண்ட இப்போட்டியில், வயது வரம்பு அடிப்படையில், சீனியர் பெண்களுக்கான பிரிவில் முதலிடம், ஆண்களுக்கான ஜூனியர், சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் ஆகிய அனைத்து பிரிவுகளிலும் முதலிடம் பிடித்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சத்யராஜ், ஆனந்தகுமார் மற்றும் திவ்யா ஆகியோரை பள்ளியின் தாளாளர் முருகேசன், செயலாளர் பிரு.ஆனந்த்பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள், மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
சரக அளவிலான கோ-கோ போட்டி ஸ்டான்லி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை பாப்பிரெட்டிப்பட்டி, ஆக.9: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சரக அளவில் நடைபெற்று வரும் குழு விளையாட்டு போட்டிகளில், ஸ்டான்லி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், கோ-கோ போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர். பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கலந்துகொண்ட இப்போட்டியில், வயது வரம்பு அடிப்படையில், சீனியர் பெண்களுக்கான பிரிவில் முதலிடம், ஆண்களுக்கான ஜூனியர், சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் ஆகிய அனைத்து பிரிவுகளிலும் முதலிடம் பிடித்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சத்யராஜ், ஆனந்தகுமார் மற்றும் திவ்யா ஆகியோரை பள்ளியின் தாளாளர் முருகேசன், செயலாளர் பிரு.ஆனந்த்பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள், மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
previous post