திருப்பூர், ஜூலை 4: திருப்பூர் வாவிபாளையத்தில் பகுதி நேர ரேஷன் கடையை செல்வராஜ் எம்எல்ஏ திறந்து வைத்தார். இதில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, திருப்பூர் மாநகராட்சி, 5வது வார்டு, வாவிபாளையம் திருக்குமரன் நகர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான 259 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் பகுதிநேர ரேஷன் கடையை, திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான செல்வராஜ், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் வடக்கு மாநகர திமுக செயலாளரும், மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார், பகுதி செயலாளர்கள் ஜோதி, மு.க.உசேன், வார்டு செயலாளர் பாப்புசாமி, சுரேஷ், மாநகர அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் பகுதி, வார்டு பிரதிநிதிகள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.