கோவை: கோவையில் தனியார் பஞ்சு ஆலையில் கொத்தடிமையாக வேலை பார்த்து வந்த வடமாநில பெண்கள் 7 பேர் மீட்கப்பட்டுள்ளனர். கோவை தனியார் பஞ்சு ஆலையில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பெண்கள் பலர் வேலை செய்து வந்தனர். கூடுதல் பணிச்சுமையால் ஜார்கண்ட் மாநில பெண் தொழிலாளர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் கொத்தடிமையாக நடத்தப்பட்டதால் பெண் தொழிலாளர்கள் விரக்தி அடைந்தனர். …