கோவில்பட்டி, மார்ச் 29:கோவில்பட்டி அருகே உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு சென்ற ₹80 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூரில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அனந்தலட்சுமி தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தென்காசி மாவட்டம் கடையாலுருட்டி பகுதியைச் சேர்ந்த மால்குடிசாமி என்பவர் ஓட்டி வந்த காரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அப்போது காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ₹80 ஆயிரம் கொண்டு செல்வது தெரிய வந்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் ₹80 ஆயிரத்தை பறிமுதல் செய்து கோவில்பட்டி தாசில்தார் சரவணபெருமாள், மற்றும் தேர்தல் பிரிவு துணை தாசில்தார் வெள்ளத்துரை ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.
கோவில்பட்டி அருகே காரில் கொண்டு சென்ற ₹80 ஆயிரம் பறிமுதல்
previous post