வீரவநல்லூர், அக்.5: சேரன்மகாதேவியை அடுத்த கோவிந்தபேரி மனோ கல்லூரியில் சேரன்மகாதேவி அரசு மருத்துவமனை, தமிழ்நாடு ஊர்க்காவல் படை மற்றும் கல்லூரி சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. முகாமிற்கு கல்லூரி முதல்வர் வினோத் வின்சென்ட் ராஜேஷ் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பாளை ஆயுதப்படை டி.எஸ்.பி சுப்பிரமணியன் பங்கேற்று முகாமினை துவக்கி வைத்தார். முகாமில் கல்லூரி மாணவர்கள், ஊர்க்காவல் படைவீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்று ரத்ததானம் செய்தனர். இதில் அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் சாந்தி மற்றும் பேராசிரியர்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். முகாமில் 36 பேர் ரத்ததானம் செய்தனர். முகாம் ஏற்பாடுகளை சேரன்மகாதேவி அரசு மருத்துவமனை பணியாளர்கள் செய்திருந்தனர்.