கிருஷ்ணகிரி, ஜன.18: காவேரிப்பட்டணம் பன்னீர்செல்வம் தெருவைச் சேர்ந்தவர் சந்திரபாய்(72). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன், வீட்டின் முன்பு கோலம் போட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு டூவீலரில் வந்த வாலிபர், வண்டியை நிறுத்தி விட்டு சந்திரபாயிடம் விலாசம் கேட்டுள்ளார். பின்னர், திடீரென சந்திரபாய் அணிந்திருந்த 5 பவுன் செயினை வாலிபர் பறிக்க முயன்றார். சுதாரித்துக்கொண்ட சந்திரபாய், செயினை பிடித்துக்கொண்டதில் செயின் அறுந்து அந்த வாலிபரின் கையில் மூன்றரை பவுன் செயின் சிக்கியது. அதனை பறித்துக்கொண்டு அவர் அங்கிருந்து மின்னல் வேகத்தில் டூவீலரில் தப்பியோடி விட்டார். இதுபற்றி நேற்று முன்தினம் காவேரிப்பட்டணம் போலீசில் சந்திரபாய் புகாரளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோலம் போட்ட மூதாட்டியிடம் செயின் பறிப்பு
previous post