‘‘டார்க்கெட் பிக்ஸ் பண்ணியாச்சு… களத்துல குதிச்சு கரன்சியை கொண்டு வாங்கனு சொன்ன தலைவரு யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘மாம்பழ கட்சி எதிர்வரும் பார்லிமென்ட் தேர்தலை எதிர்கொள்வது குறித்து பலத்த ஆலோசனையில் இருக்காம். எந்த பக்கம் போனால் அதிக சீட் கிடைக்கும் என்று அரசியல் கணக்கு ஒரு பக்கம் போட்டு கொண்டிருக்கிறதாம். அதே சமயம், உயர்மட்ட லீடருங்க, எல்லா டிஸ்டிரிக்டிலும் எலக்ஷன் பண்ட் வசூலில் மும்முரம் காட்ட ஆரம்பிச்சிட்டாங்களாம். அதிலும் தலைவர் வரும் மாவட்டங்களில், குறிப்பிட்ட அமவுண்டை கொடுத்தே ஆகவேண்டும் என்பது நிர்வாகிகளுக்கு வந்துள்ள கட்டாய உத்தரவாம். இந்த வகையில், மாங்கனி மாவட்ட நிர்வாகிங்க, லிஸ்ட் போட்டு அமவுண்ட் கலெக்ட் பண்றாங்களாம். சிட்டிங் எம்எல்ஏக்கள் மட்டுமின்றி, மாஜி எம்எல்ஏ, எம்பி.,க்களும் இதற்காக தீவிரமாக களத்தில் குதிச்சிருக்காங்களாம். இது மட்டுமல்லாமல் லோக்கல் நிர்வாகிகளுக்கும் குறிப்பிட்ட அமவுண்ட் கலெக்ட் பண்ண, இலக்கு நிர்ணயிச்சிருக்காங்களாம். இதை எப்படி, எங்கு, யாரிடம் போய் கலெக்ட் பண்ணுவது என்று நிர்வாகிங்க குழம்பிக்கிட்டு இருக்காங்களாம். இதனால் லீடருங்க வந்தா உற்சாகம் கொப்பளிக்கும் என்ற நிலைமாறி, தலைவரு எப்போது வருவார்னு முன்கூட்டியே தெரிந்தால் நாம ஊரை காலி செய்து போயிடலாம் என்ற நிலைக்கு வந்து இருக்காங்களாம்…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘போலி ஆவணம் மூலம் வசூல் வேட்டையா… அந்த தில்லாலங்கடி ஆளை பத்தி சொல்லுங்க கேட்போம்…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘நாகை மாவட்டத்தில் மண்பாண்டம் தயார் செய்யும் 102 தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் நெற்களஞ்சியம் மாவட்டத்தில் உள்ள கதர்வாரியத்தின் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்துள்ளனர். இவ்வாறு பதிவு செய்த நல வாரிய உறுப்பினர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ஆண்டு ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். கடலோர மாவட்டத்தில் உள்ள மண்பாண்டம் தொழில் செய்யும் 5 பேருக்கு மழைக்கால நிவாரண தொகை இதுவரை கிடைக்கவில்லையாம். தொகை கிடைக்காததற்கு முக்கிய காரணம், தாங்கள் பெற்ற நலவாரிய அடையாள அட்டை எண்ணுடன் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களின் வங்கி கணக்கை இணைத்து நலதிட்ட உதவிகளை பல ஆண்டு காலமாக வழங்கி வந்தது தெரியவந்துள்ளதாம். காசுக்கு ஆங்கிலத்தில் உள்ள பெயரை கொண்ட உயரதிகாரி ஒருவர் உதவியுடன் ஒவ்வொரு நபரிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்றுகொண்டு வங்கி கணக்கை மாற்றி அனுப்பிய பணத்தை சுருட்டி உள்ளாராம்…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ஏலகிரியில் குளிர் அதிகம் வீசினாலும்… மக்கள் வயிறு மட்டும் எரியுதாமே…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மிஸ்டர் பத்தூர் மாவட்டத்துல இருக்குற பிரபலமான மலையில தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வர்ற ஜனங்க சாமை, எள், நெல்லுன்னு விவசாயம் செஞ்சு வந்தாங்க. காலப்போக்குல ஏழைகளின் ஊட்டியாக மாறி, சுற்றுலாத்தலமாக மாறிடுச்சு. அதுக்கப்புறம், தமிழ்நாடு மட்டுமில்லாம, வெளி மாநிலங்கள்ல இருந்தும் சுற்றுலா பயணிங்க வந்து போய்கிட்டு இருக்காங்க. இப்படியே பல வருஷமா போச்சு. அப்புறம் வெளியில் இருந்து வர்ற ஜனங்க, ஒரு பிளாட் வாங்கி போடலாமேன்னு யோசிச்சு, ரேட் கேக்க ஆரம்பிச்சிருக்காங்க. அப்போ ரேட்டு கொஞ்சம் கம்மியாதான் இருந்திருக்குது. அங்க இருக்கிற புரோக்கருங்க நிறைய நிலம் வாங்குறாங்கணு ரேட்டை ஏத்திட்டாங்களாம். ரியல் எஸ்டேட் தொழில் கொடி கட்டி பறக்க தொடங்கிடுச்சாம். சுற்றுலா தலமாக இருக்குறதால, வெளி மாநிலங்களில் இருந்து வந்து நிலம் வாங்குறாங்களாம். இதனால நிலத்தை வாங்கினாலும், வித்தாலும் புரோக்கர்சுக்கு கமிஷன் மழை பொழியுதாம். கமிஷனுக்கு ஆசைபட்டு, விற்ற நிலத்தையே, திரும்ப விற்பனை செஞ்சி வெளியூர் ஜனங்கள ஏமாத்திகிட்டு வர்றாங்களாம். இதனால, ஏழைகளின் ஊட்டியில நிலத்தை வாங்குனதுல, பாதிபேரோட பிரச்னை கேஸ்ல தான் போய்கிட்டிருக்காம். இதனால, தனி பட்டா வழங்குறதையும் நிறுத்தி வெச்சிருக்காங்களாம். அங்க நிலங்களை வாங்குனதுல அரசியல்வாதிகள் தான் அதிகம் பேர் இருக்காங்க. இப்படியே போச்சுன்னா, ஏழைகளின் ஊட்டியில தலைமுறை, தலைமுறையாக வசிச்சு வர்றவங்க இருக்க மாட்டாங்க, வெளியாட்கள் தான் அதிகமாக இருப்பாங்கன்னு, ஏழைகளின் ஊட்டியில இருக்குற ஏழை ஜனங்க கவலையோட பேசிக்கிறாங்க. ‘‘கோயம்பேடு கட்சிக்காரரின் கட்சியில் சூறாவளி தொடங்கி, மரத்தை வேரோடு வீழ்த்திடும் போலிருக்கே…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘கோயம்பேடு கட்சியில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில், வெறும் பாக்கெட்டை வைத்து கொண்டு எப்படி அரசியல் செய்ய முடியும் என்று மாஜி எம்எல்ஏ பொங்கி எழுந்தாராம். மேலும், புதிய நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், நம்ம கட்சியை தவிர மற்ற கட்சிகளை பாருங்க… உண்டி குலுக்கியும், அன்பாக பேசியும், கட்சிக்காக நிதி சேர்க்கிறாங்க. நம்ம கட்சியில மட்டும்தான் சொந்த காசை செலவழிக்க வேண்டி இருக்கு. நம்ம கட்சியின் பெயரை சொன்னாலே, கட்சி நிதி குவியனும். ஆனால், உண்மையில் நிலைமை அப்படியா இருக்கு. நம்ம கட்சியின் பெயரை சொன்னாலே, இருக்கிறது நாலு பேரு, உங்களுக்கு நன்கொடை கொடுத்தால் எங்களுக்கு என்ன லாபம்னு கேட்கிறாங்க. நான், 20 ஆயிரம் இல்லாமல் வெள்ளை சட்டை போட்டுகிட்டு வெளியில் சென்று அரசியல் செய்ய முடியுமா. பணம் இல்லாமல் வெளியில் போக முடியாது. நம் தலைவர், சூட்கேசில் துணிமணிகளுடன் 5 லகரத்தை எடுத்துகிட்டுதான் வெளியே வருவார். நாம் இப்படித்தான் அரசியல் பண்ண வேண்டியிருக்கு. இதே நிலை நீடிச்சுது என்றால் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற ேதர்தலுக்கு பிறகு கோயம்பேடு மார்க்கெட்டை பார்க்கலாம். அந்த பக்கத்தில் இருக்கிற நம்ம கட்சியை பார்க்க முடியுமா. அதனால கரன்சியை இறைத்தால் தான் கட்சியை மாவட்ட அளவில் நடத்த முடியும். இதை சென்னை தலைமை உணர வேண்டும் என்று உண்மையை போட்டு உடைத்தாராம்…’’ என்றார் விக்கியானந்தா….