சென்னை : கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். சென்னை, செங்கல்பட்டில் கொரோனா மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதத்தில், ‘தமிழ்நாட்டில் ஏப்ரல் 15ம் தேதி நிலவரப்படி 22 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 100 ஆக உயர்ந்துள்ளது.அடுத்தடுத்த நாட்களில் கொரோனா பாதிப்பு உயர வாய்ப்பு உள்ளதால் அடுத்த 2 வாரத்திற்கு சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்பு 100ஐ நெருங்குவதால் மாவட்ட நிர்வாகங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். செங்கல்பட்டில் நேற்று 44 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் 185 பேர் சிகிச்சையில் உள்ளனர்.சில வாரங்களுக்கு நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மிகவும் அவசியம் மற்றும் முக்கியம். பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.பொதுமக்கள் கூடும் இடங்களில் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். முதல் இரண்டு, பூஸ்ட் அட்டவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் 12ம் தேதி நடைபெறும் முகாமை தடுப்பூசி செலுத்தாதவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களில் அரசின் வழிகாட்டுதல்களை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்,’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. …