Thursday, October 3, 2024
Home » கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தை உள்பட 5 பேர் பலி: போலீஸ் விசாரணை

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தை உள்பட 5 பேர் பலி: போலீஸ் விசாரணை

by kannappan

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வர்க்கலா பகுதியை சேர்ந்த பிரதாப் என்பவர் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். இவர் அருகே உள்ள புத்தன் சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி செகுளி, இளைய மகன், அகில், மூத்தமகன் நிகில், நிகிலின் மனைவி அபிராமி, நிகில் – அபிராமியின் 8 மாத குழந்தை என 6 பேர் நேற்றைய தினம் அவர்கள் வீட்டில் இருந்துள்ளனர். நேற்று நள்ளிரவில் அவர்கள் வீட்டில் தீபரவியது. இந்த நிலையில், இன்று காலை அவ்வழியாக சென்ற மக்கள் வீட்டில் தீ எரிவதை பார்த்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் தீயை அனைத்து வீட்டினுள் சென்று பாக்கும் போது 8 மாத குழந்தை உள்பட 5 பேர் தீயில் கருகி உயிரிழந்திருந்தனார். மேலும் நிகில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளதா, அல்லது கடன் தொல்லை காரணமாக அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா, அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்கா யாரேனும் வீட்டிற்கு தீவைத்து அவர்களை கொலை செய்தார்களா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். …

You may also like

Leave a Comment

three × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi