காரைக்கால்,பிப்.16: காரைக்காலில் இன்று ஒன்றிய அரசை கண்டித்து மகிளா காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சந்திரமோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ராகுல் காந்தி இழிவுபடுத்திய பாஜகவின் அராஜக போக்கை கண்டித்து இந்த செயலை செய்தவர்களின் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தி காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகே காரைக்கால் மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி நிர்மலா ஏற்பாட்டின் பேரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.