சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி இறப்பு தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் நாளைவிசாரிக்கிறது. மேலும் மறுபிரேத பரிசோதனைக்கு தடை இல்லை என தெரிவித்துள்ளது.கள்ளக்குறிச்சி அடுத்த சின்னசேலம், தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். முன்னதாக வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மாணவி இறப்பு விவகராத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உத்தரவு வரும் வரை, மறுபிரேத பரிசோதனையை நிறுத்தி வைக்க முடியாது என தெரிவித்து.இந்நிலையில் மாணவியின் தந்தை, ராமலிங்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஒரு முறையீட்டை வைத்தார். இதையடுத்து தலைமை நீதிபதி உத்தரவில், கள்ளக்குறிச்சி மாணவி இறப்பு தொடர்பான மனுவை அவசர வழக்காக நாளை பட்டியலிட்டு விசாரிக்கிறோம் இருப்பினும் மறு பிரேத பரிசோதனை என்ற வழக்கினை நிறுத்தி வைக்க முடியாது. அது சார்ந்த கோரிக்கையை நாங்கள் நிறுத்தி வைகிறோம்….
கள்ளக்குறிச்சி மாணவி இறப்பு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை: மறுபிரேத பரிசோதனைக்கு தடை இல்லை
previous post