கரூர், ஆக. 18: மத்திய அமைச்சரும், திமுக மூத்த முன்னோடியுமான முரசொலி மாறன் 91 வது பிறந்த தினத்தை முன்னிட்டு கரூரில் திமுகவினர் அவரது உருவப்படத்திற்கு ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினரும், மாநில இளைஞரணி துணை செயலாளருமான கே.இ.பிரகாஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்,நிகழ்ச்சியில் கம்பம் செல்வேந்திரன், தாயகம் கவி எம்எல்ஏ, பிரகதீஸ்வரன், ஆண்டாள் பிரியதர்ஷினி, செந்தில்வேல், சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மேயர் கவிதா கணேசன் துணை மேயர் தாரணி சரவணன், மாநகரச் செயலாளர் எஸ்.பி.கனகராஜ், தாந்தோணி கிழக்கு ஒன்றிய செயலாளர் எம். ரகுநாதன் கரூர் மாநகர பகுதி கழக பொறுப்பாளர்கள் கரூர் கணேசன் வக்கீல் சுப்பிரமணியன் ஜோதி பாசு, விஜிஎஸ் குமார், புகளூர் நகர செயலாளர் குணசேகரன், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் இரா பிரபு உட்பட பலர் கலந்து கொண்டு முரசொலி மாறன் படத்திற்கு படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.