கடலூர்: கடலூரில் அரசு விதிகளை மீறி மீன்பிடித்த விசைப்படகை மீன்வளத்துறை அதிகாரிகளும், கடலோர காவல் படையினரும் பறிமுதல் செய்துள்ளனர். கடலில் 5 நாட்டிக்கல் மைல் கல்லை கடந்து தான் விசைப்படகுகளில் மீன்பிடிக்க வேண்டுமென விதிமுறை உள்ளது. அதேபோல் கரையோர பகுதிகளில் சிறிய கண் வலைகளை பயன்படுத்த கூடாது என்பதும் மீன்பிடி விதிகளில் ஒன்று.இந்நிலையில் கடலூர் மாவட்டம் அக்கறைகோரி பகுதியில் விதிமீறி விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிப்பதாக புகார் எழுந்தது. கடலில் ரோந்து சென்ற கடலோர காவல் படை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கரையோரத்தில் சிறிய கண் வலைமூலம் மீன்பிடித்து கொண்டிருந்த பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகை மீன்களுடன் பறிமுதல் செய்தனர்….