Friday, September 20, 2024
Home » கடன் தொல்லையால் பெண் மாயம்

கடன் தொல்லையால் பெண் மாயம்

by Ranjith

 

நாகர்கோவில், செப்.11: தக்கலை அருகே உள்ள மேக்காமண்டபத்தை அடுத்த மாறாங்கோணம் நெடுவிளை பகுதியை சேர்ந்தவர் ஜாண்சன் (55). இவரது மனைவி ஜெபா (50). இவர் பல மகளிர் சுய உதவிக்குழுவில் கடன் பெற்று இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த கடனை உரிய முறையில் திரும்ப செலுத்த முடிய வில்லை. கடன் தொகையை பெற தினமும் பலர், வீடு தேடி வர தொடங்கினர். இதனால் ஜெபா மனம் உடைந்த நிலையில் இருந்துள்ளார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று காலையில் ஜாண்சன் வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டார். பின்னர் அவர் மாலையில் வரும் போது அவரது மனைவி ஜெபாவை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. இதையடுத்து உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் விசாரித்தும் ஜெபா குறித்து எந்த தகவலும் இல்லை. இதனால் கொற்றிக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

You may also like

Leave a Comment

four × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi