திருச்சி, ஜூலை 3: திருச்சியில் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள கல்லூரி அருகே கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கோட்டை போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்த அல்லித்துறையை சேர்ந்த இன்ப தமிழன் (20) என்பவரை கைது செய்தனர்.