Tuesday, October 1, 2024
Home » ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்துவதில் மக்களின் ஒத்துழைப்பை எதிர்நோக்குகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்துவதில் மக்களின் ஒத்துழைப்பை எதிர்நோக்குகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

by kannappan

* புத்தாண்டில் என்னை நேரில் சந்திப்பதை தவிருங்கள்* முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்சென்னை: ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்துவதில் பொதுமக்களின் ஒத்துழைப்பை எதிர்நோக்குகிறேன் என்றும், புத்தாண்டு அன்று என்னை நேரில் சந்திப்பதை தவிருங்கள் என்றும் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டு மக்களின் பேராதரவுடன் ஆறாவது முறையாக திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு வருகிற முதல் ஆங்கிலப் புத்தாண்டான 2022 சனவரி 1ம் நாளில், அந்த வெற்றிக்காக அயராது பாடுபட்ட திமுக நிர்வாகிகள், உடன்பிறப்புகள் பலரும் என்னை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்கிற உள்ளார்ந்த எண்ணத்தை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. எனினும், கொரோனா நோய்த் தொற்றின் புதிய வடிவான ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பில் உங்களின் முதல்வரான நானும், அந்தக் கடமையை உணர்ந்தவர்களாக கழகத்தின் உடன்பிறப்புகளாகிய நீங்களும் இருப்பதால், உங்களின் மனப்பூர்வமான வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டு, புத்தாண்டு நாளான சனவரி 1 அன்று என்னைச் சந்திப்பதற்காக நேரில் வருவதைக் கண்டிப்பாக முற்றிலும் தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.கொரோனா 2ம் அலையின் பெரும் தாக்கத்தில் தமிழ்நாடு தவித்த நேரத்தில் ஆட்சிப்பொறுப்பை ஏற்று, அதனைத் திறம்படக் கட்டுப்படுத்தியது போல, ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்துவதிலும் உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பையும் பொதுமக்களின் ஒத்துழைப்பையும் எதிர்நோக்குகிறேன். எனவே அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து, கண்ணியம் மிக்க திமுக தொண்டர்களாகக் கடமைகளை மேற்கொள்ளுங்கள். அதுவே எனக்கு நீங்கள் வழங்குகிற சிறப்பான புத்தாண்டுப் பரிசாகும். 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதல் ஆங்கிலப் புத்தாண்டு இது என்றாலும், இனி வரும் காலங்களும் திமுகவின் புத்தாண்டுகளாகவே இருக்கும் என்கிற உறுதியான நம்பிக்கையுடன் உடன்பிறப்புகள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்து, பாதுகாப்புடன் இருக்குமாறு வேண்டுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

You may also like

Leave a Comment

two × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi