முத்துப்பேட்டை, ஜூன் 29: முத்துப்பேட்டை கோவிலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உணவு பாதுகாப்புதுறை சார்பில் மக்கள் கலப்படம் இல்லாத பொருட்களை வாங்குவது அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. முன்னதாக தஞ்சாவூரிலிருந்து வந்த உணவு பாதுக்காப்பு துறையின் நடமாடும் உணவு பகுப்பாய்வகம் வாகனம் மாணவிகள் பார்வைக்கு வைக்கப்பட்டது. அந்த நடமாடும் உணவு பகுப்பாய்வு கூடத்தின் வாயிலாக உணவு மாதிரிகள் எடுத்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து மாணவிகள் மத்தியில் உணவுப் பொருளில் கலப்படம் கண்டறிவது பற்றிய விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியை மாலினி தலைமை வகித்தார். இதில் கடைகளில் கலப்படம் இல்லாத தரமான பொருட்களை வாங்க வேண்டும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொட்களை வாங்க கூடாது, அப்படி வாங்குவது மூலம் பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது என விழிப்புணர்வு