நொய்டா: உத்தரப் பிரதேசத்தில் இளம்பெண்ணை தாக்கிவிட்டு தலைமறைவான பாஜ நிர்வாகி காந்த் தியாகியை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டா பகுதியை சேர்ந்தவர் பாஜ நிர்வாகி காந்த் தியாகி தியாகி. கடந்த வெள்ளியன்று தனது குடியிருப்பில் வசிக்கும் இளம்பெண்ணுக்கும் இவருக்கும் செடிகள் வளர்ப்பது, சட்ட விரோதமாக கட்டப்பட்ட கட்டிடம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த பெண்ணை காந்த் தியாகி தள்ளி விட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், காந்த் தியாகி தலைமறைவானார். மேலும், கவுதம் புத்தா நகர் மாவட்டத்தில் சரண் அடைவது தொடர்பான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், நொய்டா போலீசார் அவர் தலைமறைவானதாக அறிவித்தனர். மேலும், அவரை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு ₹25 ஆயிரம் சன்மானமும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மீரட்டில் பதுங்கி இருந்த காந்தையும், அவருடைய கூட்டாளிகள் மூன்று பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்….
இளம்பெண் தாக்கிய சர்ச்சை; தலைமறைவான பாஜ நிர்வாகி தியாகி கைது
previous post