திருவள்ளூர்: ஆர்.கே.பேட்டை ஒன்றியம், கோபாலபுரம் ஊராட்சி பொதுமக்கள் கலெக்டர் பொன்னையாவிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளனர். அதன் விவரம் வருமாறு: ஆர்.கே.பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட கோபாலபுரம் ஊராட்சியில் தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் இலவச மாடுகள் வழங்கப்பட்டது. ஆனால் மாடுகளை முறையாக ஏழை, எளிய பயனாளிகளுக்கு வழங்காமல் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஓய்வு பெற்ற ராணுவ வீரர், அரசு ஊழியர்களின் குடும்பத்தினர் மற்றும் வசதிபடைத்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகளும் உரிய விசாரணை நடத்தாமல் முறைகேடாக தமிழக அரசின் இலவச மாடுகளை வழங்கி வழங்கியுள்ளனர். ஆனால் எங்களை போன்ற ஏழை எளிய நலிவடைந்த குடும்பங்களுக்கு வழங்காமல் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது. எனவே தாங்கள் உரிய விசாரணை நடத்தி உண்மையான பயனாளிகளை தேர்வு செய்து தமிழக அரசின் இலவச மாடுகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….
இலவச மாடுகள் வழங்குவதில் முறைகேடு: கலெக்டரிடம் புகார்
previous post