திங்கள்சந்தை, ஆக.2: இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உள்ளிட்ட போலீசார் திங்கள்நகர் ரவுண்டானா, இரணியல் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக தாறுமாறாக பைக்குகளை ஓட்டி வந்த எலோஜின் ஜெயா (44), கோவிந்தராஜன் (47), யோபு (37), அஜயன் (32), ராஜா (43), அரவிந்த்குமார் (40) ஆகிய 6 பேரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அவர்கள் மது போதையில் பைக்கை ஓட்டி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களது பைக்குகளை பறிமுதல் செய்த போலீசார், 6 பேர் மீதும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.