சென்னை: சென்னை அண்ணாசாலை சாந்தி திரையரங்கம் அருகே உள்ள வணிக வளாகத்தில், ரெஸ்டாரன்ட் என்ற பெயரில் கிளப் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு இரவு நேரங்களில் பெண்களை வைத்து ஆபாச நடனம் நடத்துவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்பேரில், அந்த கிளப்பை மூடி சீல் வைக்கும்படி மாநகராட்சிக்கு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி மாநகராட்சி அதிகாரிகள், நேற்று மேற்கண்ட கிளப்பை மூடி சீல் வைத்தனர். மேலும், மாநகராட்சி சட்டப் பிரிவு 1919 விதி எண் 379 (A) வின் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு சீல் வைக்கப்பட்டு இருப்பதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது….
ஆபாச நடனம்: கிளப்புக்கு சீல்
previous post