காரிமங்கலம், செப்.26: காரிமங்கலம் அடுத்த பூலாப்பட்டி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர் கோயில் வளாகத்தில், காலபைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜை ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா சரவணன், கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்னாள் இயக்குனர் ரவிசங்கர் மற்றும் பலர் செய்திருந்தனர். இதே போல், காரிமங்கலம் கடைவீதி காலபைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.