பரமக்குடி, மார்ச் 7: பரமக்குடி நகர்மன்றத்திற்கு உட்பட்ட டாக்டர் சீனிவாசன் நகராட்சி தொடக்கப் பள்ளியில் முதல் வகுப்பில் மாணவர்கள் சேர்ப்பதற்கான விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் 15 புதிய முதலாம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. பரமக்குடியில் 23வது வார்டு சீனிவாசன் நினைவு நகராட்சி தொடக்கப் பள்ளி மேலச்சத்திரம் பகுதியில் உள்ளது. ஆங்கில வழிக்கல்வியில் பயிற்று விக்கும் இந்த பள்ளியில் முதல் வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணியினை வட்டார கல்வி அலுவலர் ரவிக்குமார் தொடங்கி வைத்தார். தலைமை ஆசிரியர் பிரேமலதா வரவேற்றார். பேரணி நடைபெற்றதை தொடர்ந்து புதிதாக 15 மாணவர்கள் உதவி திட்ட அலுவலர் தர்மராஜ் முன்னிலையில் முதல் வகுப்பில் சேர்க்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் பாண்டீஸ்வரி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகேஸ்வரி உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.