புழல்: செங்குன்றம் அடுத்த வடகரை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் சார்பில் ஆறாவது பட்டமளிப்பு விழா நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இவ்விழாவிற்கு பயிற்சி நிலைய முதல்வர் அமர்நாத் தலைமை தாங்கினார். அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தின் குழு தலைவர் ஆனந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பல்வேறு பிரிவுகளில் தேர்வு பெற்ற 75 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் அலமாதி அரசு மாடல் பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சன் கென்னடி, வடகரை ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் ஜானகிராமன் மற்றும் பயிற்சி நிலையத்தில் படிக்கும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்….