திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூர் டிசிஎல் கம்பெனி அருகில் வசித்து வருபவர் பிரகாஷ் (37). இவர் மணவாளநகரில் அடகு கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு 7.50 லட்ச ரூபாயை ஒரு பையிலும் 2 லட்சம் ரூபாயை தனது பான்ட் பாக்கெட்டிலும் வைத்துக்கொண்டு பைக்கில் வீட்டிற்கு கிளம்பினார். மேல்நல்லாத்தூரில் உள்ள சாலை வேகத்தடை பகுதியில் பைக்கை மெதுவாக இயக்கியபோது பின்னால் பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம ஆசாமிகள் பிரகாஷை மறித்து அவர் வைத்திருந்த பணத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து பைக்கில் மர்ம நபர்கள் தப்பிச்சென்று விட்டனர். இதுகுறித்து மணவாளநகர் காவல் நிலையத்தில் பிரகாஷ் புகார் கொடுத்தார். டிஎஸ்பி. சந்திரதாசன் தலைமையில், போலீசார் வழக்குபதிவு செய்தனர். கொள்ளை நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்….