மேலும் தங்களது கட்சி பதவியையும் ராஜினாமா செய்வதாக அக்கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கடிதம் அனுப்பினர். இருவரும் விரைவில் தெலுங்கு தேசம் கட்சியில் இணைய உள்ளனர். மாநிலங்களவையில் பிரதிநிதித்துவம் இல்லாத தெலுங்குதேசம் கட்சி, இடைத்தேர்தல் நடப்பதன் மூலம் தனது பலத்தை அதிகரித்து கொள்ள செய்வதற்கான வாய்ப்பாக முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசியல் வியூகத்துடன் செயல்படுகிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.