விபத்தை தொடர்ந்து டி.டி.எஃப். வாசன் மீது நேற்று பாலுசெட்டி சத்திரம் போலீஸ் வழக்குபதிவு செய்திருந்தது. உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்கியது, கவனக்குறைவாக செயல்படுதல் உள்பட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, காவல்துறையினர் விசாரணை முடிந்து மருத்துவ பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனை நிறைவு பெற்றது.
நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்று காலை டி.டி.எஃப். வாசனை போலீசார் கைது செய்து காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1ல் நீதிபதி இனியா கருணாகரன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அச்சமயம், யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு அக்டோபர் 3ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.