யூடியூபர் டிடிஎப்.வாசன் தனது செல்போனை ஒப்படைக்க காவல்துறை நோட்டீஸ்

மதுரை: யூடியூபர் டிடிஎப்.வாசன் தனது செல்போனை ஒப்படைக்க காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. யூடியூபரான டிடிஎப்.வாசன், சில தினங்களுக்கு முன் மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு சென்றபோது மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே செல்போன் பேசியபடியே கார் ஓட்டும் வீடியோவை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் வைரலானதையடுத்து, விசாரணைக்காக நேற்று முன்தினம் ஆஜரான வாசனை மதுரை, அண்ணாநகர் போலீசார் கைது செய்து மதுரை ஜேஎம் 6வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர் மன்னிப்பு கோருவதாக வக்கீல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மாஜிஸ்திரேட் சுப்புலட்சுமி, இனிமேல் பொதுமக்களுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட மாட்டேன் என உறுதிமொழி அளித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும், தினசரி அண்ணாநகர் காவல் நிலையத்தில் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திடவும் நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கினார். இந்நிலையில் டிடிஎப்.வாசன் தனது செல்போன் ஒப்படைக்க காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. போன் பேசியபடி காரை ஓட்டிய வழக்கில் டிடிஎப் வாசன் 3 நாட்களுக்குள் செல்போன் ஒப்படைக்க அண்ணாநகர் போலீஸ்

Related posts

பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளரின் மகன் கைது

தமிழ்நாட்டில் 4 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தியது

பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காததால் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்