சென்னையில் தாறுமாறாக கார் ஓட்டியதால் விபத்து பிரபல யூடியூபர் டி.டி.எப்.வாசன் நண்பர்களுடன் தப்பி ஓட்டம்: பைக்கில் சென்றவர் படுகாயம்

* சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

சென்னை: சென்னையில் பிரபல யூடியூபர் டி.டி.எப்.வாசன் நண்பர்களுடன் தாறுமாறாக கார் ஓட்டி சென்றதில், முன்னால் ெசன்ற பைக் மீது மோதியது. இதில், ஒருவர் படுகாயமடைந்தார். பொதுமக்கள் ஒன்று கூடியதை அறிந்த டி.டி.எப்.வாசன் தனது நண்பர்களுடன் ஆட்டோவில் தப்பி ஓடிவிட்டார். தமிழகம் மற்றும் நாடு முழுவதும் விலை உயர்ந்த பைக்கில் அதிவேமாக பயணம் செய்து, அதை வீடியோவாக தனது யூடியூப்பில் பதிவிட்டு பிரபலமடைந்தவர் டி.டி.எப். வாசன். இவர், அசுரவேகத்தில் பைக் ஓட்டி தனக்கு என ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் தனது புதிய வீடியோக்கள் மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து மிகவும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் பிரபலமடைந்த டி.டி.எப் வாசன், ‘மஞ்சள் வீரன்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக போஸ்டர் வெளியாகி அவரது ரசிகர்களிடையே பாராட்டை பெற்று வருகிறது. அதேநேரம், டி.டி.எப்.வாசன் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்காமல் அதிவேமாக வாகனம் ஓட்டியதாகவும், ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓட்டியதாகவும், நம்பர் பிளேட் இல்லாமல் புதிய காரை இயக்கியதாகவும் என பல்வேறு வழக்குகள் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் டி.டி.எப் வாசன் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், மேலும் ஒரு சர்ச்சையில் யூடியூபர் டி.டி.எப். வாசன் சிக்கி உள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்திலிருந்து அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக நேற்று காலை 6.30 மணியளவில் டி.டி.எப். வாசன் தனது நண்பர்களுடன் காரில் ெசன்றுள்ளார். காரை டி.டி.எப்.வாசன் ஓட்டியதாக தெரிகிறது. அதிகாலை நேரம் என்பதால் போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் டி.டி.எப்.வாசன் காரை அதிவேகத்தில் தாறுமாறாக ஓட்டியதாக கூறப்படுகிறது. இதில் முன்னால் பைக்கில் சென்ற பன்னீர்செல்வம் (40) என்பவர் மீது மோதி கார் விபத்துக்குள்ளானது. இதில் நிலைதடுமாறி பைக்கில் வந்த பன்னீர்செல்வம் நல்வாய்ப்பாக லேசான காயங்களுடன் உயிர்தப்பினார்.

இந்த விபத்தை நேரில் பார்த்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் காரில் வந்தவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் விபத்தை ஏற்படுத்திய டி.டி.எப்.வாசன், நண்பர்கள், விபத்தில் காயமடைந்த பன்னீர்செல்வத்தை சமாதானம் செய்துவிட்டு, காரை சாலையிலேயே விட்டுவிட்டு, மின்னல் வேகத்தில் அவ்வழியாக வந்த ஆட்ேடா ஒன்றில் ஏறி தப்பி விட்டனர். இதை வாகன ஓட்டிகள் பலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிட்டனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி சென்ற நபர் பிரபல யூடியூபர் டி.டி.எப்.வாசன் என்பதால் வீடியோ மின்னல் வேகத்தில் வைரலானது. தகவல் அறிந்த அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை விபத்தில் சேதமடைந்த காரை பறிமுதல் செய்தனர். விபத்து குறித்து ஐபிசி 279, 337 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி