சென்னை : யூடியூபர் இர்ஃபானின் மனைவி தொடர்பான மருத்துவ ஆவணங்களை கைப்பற்றி செம்மஞ்சேரி போலீசார் விசாரணையை தொடங்கினர். முன்னதாக ‘பிரசவம் பார்த்த மருத்துவர் நிவேதிதா மற்றும் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி வீடியோ வெளியிட்ட இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’எனக்கோரி இளங்கோவன் என்பவர் புகாரளித்திருந்தார்.