இந்த மனு நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜரானார் என்றார். இதையடுத்து நீதிபதி, யார் பேட்டி கொடுத்தாலும் அதில் அவதூறு கருத்து இருந்தால் அதை எடிட் செய்து வெளியிட வேண்டும். பேட்டியின்போது மனுதாரருடைய கேள்வியில் உள்நோக்கம் இருப்பதற்கான முகாந்திரம் உள்ளது. ஒரு தவறான, பிரச்சினை துண்டும் வகையில் மனுதாரரின் கேள்வி உள்ளது. மேலும் மனுதாரர் பாமரர் அல்ல. அவர் நன்கு படித்தவர். பொறுப்புடன் செயல்பட்டிருக்க வேண்டும். தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.