தவறான தொழில் செய்பவர் என்றும் நேரலையாக பலமுறை பேசியுள்ளார். இது குறித்து அந்த பெண் அளித்த புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இதில் அவர், 20க்கும் மேற்பட்ட பெண்களை இழிவுபடுத்தி பேசி பதிவேற்றம் செய்ததும், ஆண்களையும் ஆபாச வார்த்தையால் திட்டி ஆடியோ பதிவேற்றம் செய்ததும் தெரியவந்தது.
அவர் மீது சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்ற இடங்களில் பல பெண்கள் புகார் கொடுத்துள்ளதும் தெரியவந்தது. தமிழ்நாடு முதல்வரையும் அவதூறாக பேசியுள்ளார். இதையடுத்து அவரை மதுரையில் நேற்று காலை போலீசார் கைது செய்து, புதுச்சேரி குற்றவியல் நீதிபதி மோகன் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.