சென்னை: பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்ததை அடுத்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றார். டிடிஎஃப் வாசனின் காவல் இன்று நிறைவு பெறுவதை ஒட்டி காஞ்சிபுரத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.