ஆனால் யூடியூப் சேனலில் அந்த காட்சிகள் சமீபத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு பலராலும் பகிர்வு செய்யப்பட்டது. ஆபாச கேள்வி அடங்கிய அந்த காணொளிக்கு கண்டனம் தெரிவித்து பலரும் கமெண்ட் செய்து இருந்தனர். இதனை தோழிகள் மூலமாக அறிந்து அதிர்ச்சிக்கு உள்ளான 23 வயது இளம்பெண், எலி மருந்தை உண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். நண்பர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து உயிரை காப்பாற்றினர். இந்த நிலையில், இது பற்றிய இளம்பெண்ணின் புகாரை அடுத்து, உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட கீழ்ப்பாக்கம் காவல்துறையினர், தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் யூடியூப் சேனலின் உரிமையாளர் ராம், ஒளிப்பதிவாளர் யோக ராஜ், நிகழ்ச்சி தொகுப்பாளர் ஸ்வேதா ஆகியோரை கைது செய்தனர்.