தனியார் ஊழிரை வெட்டிய வழக்கில் 3 வாலிபர்கள் சிக்கினர்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த மாநெல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (21). இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2ம் தேதி இரவு 8 மணியளவில் 3 பேர் கொண்ட கும்பல் சக்திவேலை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

இதில், ரத்த வெள்ளத்தில் கிடந்த சக்திவேலை 108 ஆம்புலன்ஸ் மூலம் கோட்டக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு முதல் உதவி கொடுத்தனர். பின்னர், அங்கிருந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  பாதிரிவேடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தபோது அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்து ஓடியது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மாதம்பாக்கம் வாகன சோதனையில் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர்கள்தான் சக்திவேலை அரிவாளால் வெட்டியவர்கள் என தெரிய வந்தது. விசாரணையில் அவர்கள் பெரிய ஒபுளாபுரம் ஊராட்சி காய்லர்மேடு கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுன் (எ) ஜெபராஜ் (23), சண்முகம் (20), அருண் குமார் (20) என்பது தெரிய வந்தது. மேலும், சக்திவேலை முன்விரோதம் காரணமாக வெட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து 3 பேரையும் கைது செய்து பொன்னேரி நீதிமன்றதில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related posts

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது

தூய்மை சேவை விழிப்புணர்வு மாரத்தான்: நகராட்சி நிர்வாக இயக்குநர் தொடங்கி வைத்தார்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், கடனுதவி: கலெக்டர் வழங்கினார்