இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, இரண்டு சவரன் தங்க நகை மற்றும் 300 கிராம் வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரிந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த வினோத் (24), மணிகண்டன் (21) மற்றும் கணேசன் (21) ஆகியோரை கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 200 கிராம் வெள்ளி மற்றும் 2 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.