பட்டியல் சமூகத்தை சேர்ந்த இரு இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம்!

நெல்லை: பட்டியல் சமூகத்தை சேர்ந்த இரு இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வர தெரிவித்துள்ளதாவது; “மணிமூர்த்தீசுவரத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த இரு இளைஞர்களை சாதிவெறி கும்பல் கடுமையாக தாக்கியதுடன், அவர்கள் மீது சிறுநீர் கழித்து இழிவுபடுத்திய இந்த அநாகரிக்க செயலை விசிக சார்பில் கடுமையாக நான் கண்டிக்கிறேன். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை ஜாமினில் வெளியே விடாமல் வழக்கை விரைந்து விசாரித்து உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என விசிக தலைவர் தெரிவித்துள்ளார்.

Related posts

திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டையொட்டி சென்னை மெரினாவில் இன்று சாகச நிகழ்ச்சி