புதுடெல்லி: ஒன்றிய அரசின் தீன தயாள் உபாத்யாயா கிராமீன் கவுசல்யா யோஜனா எனப்படும் தேசிய கிராமப்புற இளைஞர் வேலைவாய்ப்பு திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் 14லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சி அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அமைச்சகத்தின் தரவுகளின் படி, ‘‘மொத்தம் 14.51லட்சம் பேர் பயிற்சி பெற்றுள்ளனர். இவர்களில் 8.70லட்சம் பேர் இதுவரை வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் ஏப்ரலில் ரூ.7,015.61கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது” என்பது குறிப்பிடத்தக்கது.