மது மறுவாழ்வு மையத்தில் உடல் நலக்குறைவால் வாலிபர் பலி


திருப்போரூர்: திருப்போரூர் அருகே மது மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்ட வாலிபர், உடல் நலக்குறைவால் பரிதாபமாக பலியானார். சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜூ (38). இவர், கடந்த சில நாட்களாக அதிகளவில் மது அருந்தியதால், உடல்நலன் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால், அவருடைய மதுப்பழக்கத்தை ஒழிக்க அவரது குடும்பத்தினர் கடந்த 28ம்தேதி கேளம்பாக்கத்தை அடுத்துள்ள வேங்கட மங்கலம் பகுதியில் செயல்பட்டு வரும் மது அடிமைகள் மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் ராஜூக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், மைய நிர்வாகிகள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி ராஜூ உயிரிழந்தார். இதுகுறித்து, மருத்துவமனை சார்பில் தாழம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு