பாலத்தின் அருகே தான் நின்றேன் என்று இளைஞர் வாக்குவாதம் செய்ய ஆத்திரமடைந்த டிக்கெட் பரிசோதகர் அக்ஷயா, இது எங்க ஊரு நான் இந்தி பேச முடியாது எனக்கூறியதோடு, ஒருமையில் பேசி ஆவேசமாக எழுந்து அந்த இளைஞரை கன்னத்தில் அறைந்தார். ரயில் பயணி ஒருவர் தனது மொபைல் போனில் வீடியோவாக படம்பிடிக்கப்பட்ட இந்த காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இது குறித்து, ரயில்வே போலீசில் எந்த புகாரும் இல்லை. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து ரயில் டிக்கெட் பரிசோதகர் அக்ஷயா, வேடிக்கை பார்த்த தலைமை டிக்கெட் பரிசோதகர் ஹரிஜான் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பெண் டிக்கெட் பரிசோதகர் அநாகரிகமாக நடந்து கொண்ட வீடியோ வைரலானதை அடுத்து ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.