மேலும், தந்தை ரவி சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர். இவர், கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று வீட்டில் யாருமில்லாத நேரத்தில் ஹரினி புடவையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். தகவலறிந்த சதுரங்கப்பட்டினம் போலீசார் ஹரினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். திருமணமாகி ஒரு மாதமேயானதால் ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தவிடப்பட்டுள்ளது.