Thursday, September 19, 2024
Home » இளம்பெண் மர்ம சாவில் திடீர் திருப்பம் கணவருடன் மாமியார், கொழுந்தன் கைது: சயனைடு கொடுத்து கொன்றது அம்பலம்

இளம்பெண் மர்ம சாவில் திடீர் திருப்பம் கணவருடன் மாமியார், கொழுந்தன் கைது: சயனைடு கொடுத்து கொன்றது அம்பலம்

by Arun Kumar

ஊட்டி: ஊட்டியில் இளம்பெண் மர்மசாவு வழக்கில் திடீர் திருப்பமாக, வரதட்சணை தராததால் காபியில் சயனைடு கலந்து கொடுத்த கணவர், மாமியார் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.ஊட்டி காந்தல் பென்னட் மார்க்கெட்டை சேர்ந்தவர் ஜவஹருல்லா(50). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி யாஸ்பின்(47). இவர்களுக்கு இம்ரான் (27), முக்தார் (24) என இரண்டு மகன்கள் உள்ளனர். ஊட்டி வண்டிச்சோலையை சேர்ந்த அப்துல்சமது என்பவரின் மகள் ஆஷிகா பர்வீன் (22) என்பவரை இம்ரான் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி திருமணம் செய்தார்.

தம்பதிக்கு 2 வயதில் குழந்தை உள்ளது. கூட்டுக்குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில் மாமியார் யாஸ்பினுக்கும், ஆஷிகா பர்வீனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.இந்நிலையில், கடந்த ஜூன் 23ம் தேதி வாயில் நுரை தள்ளி ஆஷிகா பர்வீன், கணவர் வீட்டில் இறந்து கிடந்தார். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டாலும், அவரது சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

இதைத்தொடர்ந்து ஊட்டி மேற்கு போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி சந்தேக மரணம் என வழக்குப்பதிந்து விசாரித்தனர்.இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கை முடிவில் ஆஷிகா பர்வீனுக்கு காபியில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து ஆஷிகா பர்வீனின் கணவர் இம்ரான், மாமியார் யாஸ்மின், மைத்துனர் முக்தார் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில்,“யாஸ்பின் குடும்பத்தினர் புதிதாக இடம் வாங்குவதற்காக பெற்றோரிடம் ரூ.20 லட்சம் வரதட்சணை வாங்கி வருமாறு ஆஷிகா பர்வீனிடம் கேட்டனர். அவரால் பணம் கொடுக்க முடியவில்லை. இதனால், ஊட்டி மெயின் பஜார் பகுதியில் உள்ள ஜூவல்லரியில் நகைக்கு பாலீஸ் போடும் சயனைடை வாங்கி காபியில் கலந்து கொடுத்து ஆஷிகா பர்வீனுக்கு கொடுத்து உள்ளனர். இதைக் குடித்த அவர் துடிதுடித்து இறந்துள்ளார்.இந்நிலையில் உடற்கூராய்வின் போது பூனேவுக்கு அனுப்பப்பட்ட உடற்பாகங்கள் ஆய்வில் ஆஷிகா பர்வீன் உடலில் சயனைடு கலந்திருப்பது உறுதியாகியுள்ளது. இதன் பேரில் யாஸ்பின், இம்ரான், முக்தார் மற்றும் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

twelve + 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi