இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆர்டிஓ விசாரணை


திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், தொடுகாடு கிராமத்தை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ். இவரது மனைவி நதியா(27). இவர்கள் இரண்டு பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனவேதனை அடைந்த நதியா நேற்று முன்தினம் 23ம் தேதி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மின்விசிறியில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் குறித்து மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். இறந்த நதியாவிற்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆனதால் அவரது சாவு குறித்து திருவள்ளூர் ஆர்டிஓ விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Related posts

திருவள்ளுவர் விருது உள்பட73 விருதுகளுக்கு ஆக.15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: அரசு அறிவிப்பு

சொல்லிட்டாங்க…

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் பிரசாரம்